ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டது!

Date:

ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தெஹ்ரான் வந்திருந்த நிலையில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹினியா தங்கியிருந்த விடுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகவும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் அமெரிக்கவிலிருந்து வெளியாகின்ற ‘த நியூயோர்க் டைம்ஸ்’ நேற்று (01) செய்தி வெளியிட்டுள்ளது.

5 மத்தியக் கிழக்கு அதிகாரிகளையும் ஒரு அமெரிக்க அதிகாரியையும் மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர படைகளே (IRGC) விடுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெஹ்ரானுக்கு விஜயம் செய்த பல சந்தர்ப்பங்களிலும் ஹனியாவுக்கு இந்த விடுதியையே தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது. புதனன்று இவரது மெய்ப்பாதுகாவலரும் இங்கு தங்கியிருந்த வேளையிலேயே குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு தாக்குதலுக்கு இஸ்ரேல் இதுவரை பொறுப்புக்கூறவோ மறுக்கவோ இல்லை, ஆனாலும் ஈரானிய ஆன்மிகத் தலைவர் அலி கொமைனி இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...