ஈரான் துணை ஜனாதிபதி பதவி விலகல்: அந்நாட்டு அரசியலில் பரபரப்பு!

Date:

ஈரான் துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளமையானது, அந்நாட்டு அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஜூன் 15ஆம் திகதி உலகுவானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இருந்த இப்ராகிம் ரெய்சி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஜூன் 28,மற்றும் ஜூலை 05 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 2.45 கோடி ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையுடன் ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஷ்கியான் பதவியேற்றார். அவருடன் துணை ஜனாதிபதியாக ம ஜாவித் ஜப்ரி பதவியேற்றார்.

இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவிவிலகுவதாக தன் ‛எக்ஸ்‛ வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அதிருப்தி அடைந்து, பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வேறு பல காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...