‘ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம்’; இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய பிரித்தானியா

Date:

இஸ்ரேலிற்கு விதிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை ஒன்றை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காசா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்துகின்றது.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட பொருட்களில் போர் விமானங்கள், உலங்குவானுர்திகள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான பாகங்களும் அடங்கும்.

இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி Yoav Gallant இந்த நடவடிக்கையால் தான் “ஆழ்ந்த மனமுடைந்து” இருப்பதாகத் தனது சமூகவலைத்தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...