புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்காது: முஸ்லிம் கட்சிகள் அஜித் தோவலிடம் உத்தரவாதம்

Date:

புதிதாக உருவாக்கப்படும் சஜித் பிரேமதாசவின் அரசாங்கத்தில் தாங்கள் முக்கிய பொறுப்புக்கள் வகிப்போம் எனவும் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கைகள் நிச்சயமாக இந்தியாவின் நேச சக்திக்கு முரணாக இருக்க மாட்டாது என இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தரவாதம் வாங்கியுள்ளனர்.

அஜித் தோவலினுடனான சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இது வரையான பிரச்சார கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் நிறைந்து காணப்பட்டதாகவும் தோவலிடம் கூறிய அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 90 வீதமான முஸ்லிம்கள் சஜித் பிரமேதாசவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...