‘ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம்’; இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய பிரித்தானியா

Date:

இஸ்ரேலிற்கு விதிக்கப்பட்ட இராணுவ உபகரணங்களுக்கான உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில், ஆபத்தான ஆயுதங்களை காசாவில் பயன்படுத்தலாம் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை ஒன்றை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காசா போர் தொடர்பில் இஸ்ரேலின் ஆயுத உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளதாக, வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 உரிமங்களை பிரித்தானியா இடைநிறுத்துகின்றது.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட பொருட்களில் போர் விமானங்கள், உலங்குவானுர்திகள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான பாகங்களும் அடங்கும்.

இதுபோன்ற மோதலை எதிர்கொள்ளும்போது, ஏற்றுமதி உரிமங்களை மறுபரிசீலனை செய்வது இந்த அரசாங்கத்தின் சட்டப்பூர்வ கடமையாகும்” என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி Yoav Gallant இந்த நடவடிக்கையால் தான் “ஆழ்ந்த மனமுடைந்து” இருப்பதாகத் தனது சமூகவலைத்தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...