சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தக்கோரி ‘கண்டி மக்கள் சபையால்’ ஸ்டிக்கர் பிரசாரம்

Date:

சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் கண்டியில் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் ஸ்டிக்கர் பிரசார விழிப்புணர்வொன்று கண்டி மக்கள் சபையால்  கண்டி நகரில் கடந்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது தேர்தலின் நியாயமான மற்றும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியும் ஸ்டிக்கர்கள்,போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மக்கள் இடையேயான விழிப்புணர்வை மேம்படுத்தி, தேர்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்த உதவுவதுடன், வன்முறைகளுக்கு எதிரான சமூக அக்கறையை தூண்டும் முயற்சியாகும்.

மேலும் நிகழ்ச்சியில் மக்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, சட்டவிரோதமான முறைகளை பின்பற்றாதது மற்றும் சட்டத்திற்கேற்ற முறையில் தேர்தல் நடத்துவது அவசியமாகும் என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...