இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்!

Date:

இலங்கை வானொலியில்  செய்தி வாசித்த முதல்  முஸ்லிம்  பெண்ணான ஆயிஷா ஜுனைதீன் தனது 74 ஆவது வயதில் காலமானார்.

முஸ்லிம்  சேவை முதல் பணிப்பாளர் வி.ஏ .கபூரின்  சிபார்சில்  முதன் முதலாக “பிஞ்சு மனம்” சிறுவர் நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை பெற்ற  ஆயிஷா ஜுனைதீன், சிலாபம் மாதம்பை பழைய நகரிலிருந்து வானொலிக்குள்  பிரவேசித்து, முஸ்லிம் சேவையின்  முதல் பெண்  தயாரிப்பாளரானார்.

இலங்கை வானொலியில், செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையும் தொலைக் காட்சியில் செய்தி வாசித்த முதல் முஸ்லிம் பெண் மற்றும் அறிவிப்பாளர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும்.

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும்...

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...