யுத்தத்திற்குப் பிறகு வடக்கு-கிழக்கின் அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம் – மன்னாரில் சஜித்

Date:

யுத்தம் காரணமாக மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்த வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை உடனடியாக நடத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதேநேரம்  இது கடந்த காலங்களில் முன்னாள் தலைவர்களுக்கு எளிதாகக் கிடைக்காத வாய்ப்பு என்றும், ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு, ஒரு பரந்த அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிப் பேரணி தொடரின் 32வது கட்டம் நேற்று (03) மன்னாரில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, 2022 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு-கிழக்குக்கு குறைவான பங்களிப்புகளை அதிகரிக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பல சலுகைகளை வழங்குவதாகவும், விவசாய கடனை இரத்து செய்யவும், QR CODE முறையை பயன்படுத்தி நிவாரண எரிபொருளை வழங்கவும், சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் நாங்கள் தீர்மானித்துள்ளோம் என அவர் கூறினார்.

மேலும், வீடமைப்பு திட்டத்தை மீண்டும் உருவாக்கி, பொதுமக்களுக்கு வீடு-காணி வழங்கப்படும் பொறுப்புகளை மேற்கொள்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

ஆண் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அவர் உறுதியளித்தார்.

மன்னாரின் அபிவிருத்திக்காக இந்தியா மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான போக்குவரத்து தொடர்புகளை மையமாகக் கொண்டு புதிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும், சுற்றுலாத்துறை மற்றும் உற்பத்தி துறையில் மேலும் முன்னேற்றங்களை கொண்டுவருவோம் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒப்பிடும் போது பகல் 1 மணி...

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; பெண் பத்திரிகையாளர் உட்பட 5 பேர் பலி.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பெண் பத்திரிகையாளர் உட்பட 5...