சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்தக்கோரி ‘கண்டி மக்கள் சபையால்’ ஸ்டிக்கர் பிரசாரம்

Date:

சுதந்திரமானதும் நியாயமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்தவும் கண்டியில் வன்முறைகளை கட்டுப்படுத்தவும் ஸ்டிக்கர் பிரசார விழிப்புணர்வொன்று கண்டி மக்கள் சபையால்  கண்டி நகரில் கடந்த மாதம் ஆகஸ்ட் 23ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது தேர்தலின் நியாயமான மற்றும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியும் ஸ்டிக்கர்கள்,போஸ்டர்கள், துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மக்கள் இடையேயான விழிப்புணர்வை மேம்படுத்தி, தேர்தல் முறையை சிறப்பாகச் செயல்படுத்த உதவுவதுடன், வன்முறைகளுக்கு எதிரான சமூக அக்கறையை தூண்டும் முயற்சியாகும்.

மேலும் நிகழ்ச்சியில் மக்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, சட்டவிரோதமான முறைகளை பின்பற்றாதது மற்றும் சட்டத்திற்கேற்ற முறையில் தேர்தல் நடத்துவது அவசியமாகும் என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...