மாணவக் குழுக்களிடையே மோதல்: தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம்!

Date:

இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை 6 மணிமுதல் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...