வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இதையெல்லாம் செய்யக்கூடாது!

Date:

வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர்.

குறித்த அறிவுறுத்தலை ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

“குடிமக்கள் செல்லும் போது நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.காலையில் மது அருந்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல், முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் இருப்பதை நம் அனுபவத்தில் பார்த்துள்ளளோம்.

அத்தோடு, வாக்குச்சாவடிகளில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும்.

மேலும், சிலர் கூரிய ஆயுதங்கள் மற்றும் சிறு கத்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வாக்களிக்க வரும் சம்பவங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.

ஒரு வேளை நீங்கள் வேலைக்குச் சென்று வாக்களிக்க செல்வீர்களானால் இது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.

எனவே இது போன்ற சிறிய சம்பவம் வாக்குச்சாவடியை சீர்குலைத்தால், அது முழு வாக்குப்பதிவு செயல்முறையையும் தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...