கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Date:

இந்திய விமானம் ஒன்றுக்கு  கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியில்  இன்று மூன்றாவது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உடனடியாக விமானம்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இந்தியன் எயார்லைன்ஸ் ஆகும் மற்றும் இது வழமைபோல் இன்று மாலை 04.05 மணிக்கு தரையிறங்குவதற்காக திட்டமிடப்பட்டது. ஆனால், வெடிகுண்டு மிரட்டலால் 08 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்தனர். இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இந்தியன் எயார்லைன்ஸ் தலைமையகம், விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்ததை தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டு  சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்

மும்பையிலிருந்து கட்டுநாயக்கா வந்த மற்ற இரண்டு விமானங்களுக்கு முன்னதாகவே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...

இலங்கையின் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள்

-ரிசா யெஹியா சிரேஷ்ட கட்டிடக் கலைஞர். பகுதி-1 இலங்கையில் தேசிய பாதுகாப்பு இன்னும் பெரும்பாலும்...

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு...

மோசமான வானிலை: பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

நிலவும் மோசமான வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, நடைபெறவுள்ள தரம் 5...