‘காணாமல் போன ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கைகள் தேடிக் கண்டுபிடிக்கப்படும்’

Date:

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு பல அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடைசியாக முன்வைக்கப்பட்ட அறிக்கை காணாமல் போனதாகவும் அறிக்கைகளில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும் கிடைத்திருக்கின்ற தகவல்களை விசாரணை செய்து உண்மையான மற்றும் முழுமையான அறிக்கையை விரைவில் தேடிக் கண்டுபிடிப்போம் என இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜுலை மாதம் நியமித்த 3 பேர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை இப்போது முன்னாள் ஜனாதிபதியிடம் இருக்கிறதா அல்லது சட்டமா அதிபரிடம் இருக்கிறதா என்பதையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஏற்கனவே பல பல குழுக்கள் நிமியக்கப்பட்டிருந்த நிலையில் இனியும் புதிய குழுக்கள் நிமியக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலி ஓய்வை அறிவித்திருந்தாலும் இந்த விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டுள்ள அறிக்கைகளை அவரிடமிருந்து பெற்று விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...