ஐந்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Date:

இலங்கையின் ஐந்து மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்குவதற்கு அந்தந்த மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுகள்  தீர்மானித்துள்ளன.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளைய தினம் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நாளுக்கான கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி (சனிக்கிழமை) முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...