மதிய உணவு திட்டம் நிறுத்தம்? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

Date:

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பொய்யானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த தகவல் அனைத்தும் பொய்யானது எனவும் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Popular

More like this
Related

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு

யுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி...