ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடியில், பள்ளிவாசல் மற்றும் பல்துறை கட்டடம் திறப்பு!

Date:

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட
மஜ்மா நகர் கொவிட் மையவாடியில் மஸ்ஜித் உட்பட பல் தேவை கட்டிடமொன்று நேற்று (01) திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக  கையளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றினால் மரணமடைந்து மஜ்மா நகரில் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ள பேருவளை சீனன்கோட்டையை சேர்ந்த ஹாஜியானி சவாஹிர் இரீபதுல் ஹைரியா என்பவரின் நன்மைக்காக அவரது கணவர் அல் ஹாஜ் எம்.இஸட்.எம்.ஸவாஹிர் மற்றும் அவரது பிள்ளைகளினால் இந்த மஸ்ஜித் உட்பட பல்தேவை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மஜ்மா நகர் மையவாடியில் கொரானா தொற்றினால் மரணித்த 3,634 ஜனாஸாக்கள் நல்லடக்கம்
செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...