பத்ஹுல்லாஹ் குலன் உயிரிழப்பு!

Date:

2016ஆம் ஆண்டு துருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் FETO அமைப்பின் தலைவரான ஃபத்ஹுல்லாஹ் குலன் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FETO பயங்கரவாத அமைப்பு என துருக்கி அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் அமைப்பின் தலைவரான இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நேற்று உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 83.

துருக்கியில் 2016 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் திகதி இந்த அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 251 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

1999 முதல் அமெரிக்காவில் வாழ்ந்த வந்த ஆன்மீக போதகரான ஃபத்ஹுல்லாஹ் குலன் தலைமையில் (G)கெலன் என்ற இஸ்லாமிய சகோதர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் FETO அமைப்பின் தலைவரான குலன், துருக்கி தலைவர்களால் வெளியேற்றப்பட வேண்டும் என கோரிக்கைககள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...