பத்ஹுல்லாஹ் குலன் உயிரிழப்பு!

Date:

2016ஆம் ஆண்டு துருக்கியின் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் FETO அமைப்பின் தலைவரான ஃபத்ஹுல்லாஹ் குலன் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FETO பயங்கரவாத அமைப்பு என துருக்கி அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்படும் அமைப்பின் தலைவரான இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நேற்று உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 83.

துருக்கியில் 2016 ஆம் ஆண்டு ஜுலை 15 ஆம் திகதி இந்த அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 251 பேர் கொல்லப்பட்டதுடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தனர்.

1999 முதல் அமெரிக்காவில் வாழ்ந்த வந்த ஆன்மீக போதகரான ஃபத்ஹுல்லாஹ் குலன் தலைமையில் (G)கெலன் என்ற இஸ்லாமிய சகோதர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் FETO அமைப்பின் தலைவரான குலன், துருக்கி தலைவர்களால் வெளியேற்றப்பட வேண்டும் என கோரிக்கைககள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தலைமறைவாக வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...