புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; சுயாதீன குழு அறிக்கை சமர்ப்பிப்பு

Date:

தரம் ஐந்து, புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில்  ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்  அறிக்கை, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  பரீட்சை திணைக்களம்  தெரிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டைத்  தற்காலிகமாக நிறுத்தி, முறையான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதி அநுர குமார  திஸாநாயக்க அண்மையில் உத்தரவிட்டார்.

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துமாறு பெற்றோர்கள்  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால், ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

எவ்வாறாயினும், புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும்  நடத்துவதில்லையென்ற, நிபுணர் குழுவின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாதென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முன்னதாக தெரிவித்தார்.

எனினும், இக்குழுவின்  பரிந்துரைகளை ஆராய்வதற்காக மற்றுமொரு சுயாதீன குழுவைப் பிரதமர் அண்மையில் நியமித்திருந்தார்.

இக்குழுவின் அறிக்கையே பிரதமரிடம் தற்சமயம் கையளிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...