13, 14 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறை !

Date:

எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக 13 ஆம் திகதி  அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமையும் 14 ஆம் திகதி வியாழக்கிழமையும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள  ஆரம்பிக்கப்படும்.

இந்தத் தீர்மானம் குறித்து  தேர்தல்கள் ஆணைக்குழு, மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் பணிகளுக்காக பாடசாலை மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டபங்களை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும்  கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கையின் அடிப்படையில், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...