13, 14 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறை !

Date:

எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக 13 ஆம் திகதி  அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமையும் 14 ஆம் திகதி வியாழக்கிழமையும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தேர்தல் நடைபெற்று முடிந்தவுடன் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள  ஆரம்பிக்கப்படும்.

இந்தத் தீர்மானம் குறித்து  தேர்தல்கள் ஆணைக்குழு, மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் பணிகளுக்காக பாடசாலை மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டபங்களை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும்  கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.எம்.திலகா ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கையின் அடிப்படையில், வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...