தவணைப்பரீட்சை வினாத்தாளில் அரசியல் வினாக்கள்: கல்வி அமைச்சு விரைவான விசாரணை

Date:

களுத்துறை மாவட்ட  பாடசாலையொன்றில் இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்தர வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 05 வினாக்கள் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கான தொடர்பு இல்லை என்றும், குறித்த வினாத்தாள் அந்த பாடசாலையால் தயாரிக்கப்பட்டது என்றும் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர  அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் தொடர்பான உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...