பாபர் மசூதி இடிப்பு தினம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி

Date:

இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக்கட்சி  தலைவர் தமிமுன் அன்சாரி எக்ஸ் தளத்தில் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் பாபர் மசூதியை இடித்ததை விட கொடூரமானது அதன் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மசூதியை முதலில் கடப்பாறை இடித்தது, பிறகு நீதியை சந்திரசூட்டின் பேனா கிழித்தது. இடித்ததில் இந்தியா அவமானப்பட்டது. கிழித்ததில் ஜனநாயகம் படுகாயப்பட்டது’ என்று அவர் பதிவிட்டார்.

உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இன்றைய தினம் நாடு முழுவதும் பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று பல முஸ்லிம் குடியிருப்புகள் சூறையாடப்பட்டன, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது, இதன் விளைவாக சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டனர். அந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி அயோத்தி உள்பட நாடு முழுவதும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...