உலக முஸ்லிம் லீக்கின் இலங்கை கிளையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கையளிப்பு

Date:

சவூதி அரேபியா மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற உலக முஸ்லிம் லீக்கின் கொழும்பு அலுவலகம் ஏற்பாடு செய்த அண்மையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று கொலன்னாவை மங்களபாய விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கை அலுவலகத்தின் பணிப்பாளராக செயற்படுகின்ற அஷ்ஷெய்க் முஹம்மது இம்ரான் பின் ஜமாலுத்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் உயர் அதிகாரிககள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பெறுமதி வாய்ந்த நிகழ்வில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1780 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா 9000 பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த பல வருடங்களாக இந்த அலுவலகமானது இலங்கையின் பல பாகங்களிலும் பாதிக்கப்படக்கூடிய சகல இனங்களையும் சேர்ந்த மக்களுக்குமான நிவாரணங்களை வழங்கி வருவதோடு ஆதரவற்றோர் மற்றும் தேவையுடையவர்களுக்கான உதவிகளையும் இலங்கையிலும் உலகின் பல நாடுகளிலும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...