ஹஜ் குழு உறுப்பினராக அல்ஹாஜ் பௌசுல் ஹக் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டார்!

Date:

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய அரச ஹஜ் குழு அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் உறுப்பினர்களான சட்டத்தரணி டி.கே.அசூர், வை.எல்.எம். நவவி, ஆகியோர் நேற்று தமது நியமனக் கடிதங்களை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து பெற்றுக் கொண்டனர்.

குழுவின் உறுப்பினரான பட்டயக் கணக்காளரான பெளசுல் ஹக் தனது நியமனப் பத்திரத்தை இன்று அமைச்சரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

அல்ஹாஜ் பெளசுல் ஹக் அவர்கள் ஹைலன்ட் குரூப் ஒப் கம்பெனியின் முகாமைத்துவ பணிப்பளாராகவும் தலைவராகவும் இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் உதவித் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

மேலும் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் ட்ரஸ்டியாகவும் இதற்கு முன்னர் பணியாற்றியிருக்கின்றார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...