புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு Smart Class தளபாடங்கள் வழங்கி வைப்பு!

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், முன்னைய அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் – 5ஆம் வட்டார அமைப்பாளர் M.M.M. முர்ஷித் முன்வைத்த வேண்டுகோளின் பேரில், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு ரூ.4,30,000 பெறுமதியிலான Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் (09) கையளிக்கப்பட்டன.

இதில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர் M.H. முஹம்மத், 07ஆம் வட்டார அமைப்பாளர் ரஸீன் ஆசிரியர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர் அஜ்மல், செயலாளர் பொறியியலாளர் மரைக்கார், பொருளாளர் சட்டத்தரணி பாரிஸ், நிர்வாக சபை உறுப்பினர் ஹாபி உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...