ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்- ஈரானிய அறிஞர் சந்திப்பு..!

Date:

கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி பஹ்மன் மொசாமி கூடார்ஸி மற்றும் ஈரானிலிருந்து வருகை தந்துள்ள அறிஞர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் ஹாத்திம் பூரி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (26) நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் தலைமையில் கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

மீடியா போரத்தின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் பற்றியும் நாடு பூராகவும் உள்ள போரத்தின் உறுப்பினர்களின் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிஹான் இங்கு எடுத்துக்கூறினார்.

ஈரானிய தூதரகத்தின் ஆதரவுடன் நடத்தப்படுகின்ற மகளிர் நிகழ்வுகள் தேசிய தின நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கலந்துகொண்டு வருவதை ஞாபகப்படுத்தியதோடு ஈரான் நாட்டுக்கு தமது சில உறுப்பினர்கள் ஊடக சுற்றுலாவுக்கு சென்று வந்ததையும் போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிஹான் ஞாபகப்படுத்தினார்.

எதிர்காலத்தில் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் போரத்தின் உறுப்பினர் களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற்கு ஊடகத்துறை பயிற்சி வாப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரான் கலாசார நிலையம் சார்பில் உரையாற்றிய கலாநிதி மொசாமி கூடார்ஸி,

இந்நாட்டில் சகல இனங்களையும் இணைத்து மீடியா போரத்தின் செயற்பாடுகள் நடைபெறவேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஊடக பயிற்சிகளையும் பாரசீக மொழி அறிவையும் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஈரான் கலாசார நிலையத்தில் இலவசமாக நடைபெறும் ஒரு வருட இரண்டு வருட கால பாரசீக மொழி கற்கையில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...