ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்- ஈரானிய அறிஞர் சந்திப்பு..!

Date:

கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தின் கவுன்சிலர் கலாநிதி பஹ்மன் மொசாமி கூடார்ஸி மற்றும் ஈரானிலிருந்து வருகை தந்துள்ள அறிஞர் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் வல் முஸ்லிமீன் ஹாத்திம் பூரி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (26) நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.எம். நிலாம் தலைமையில் கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

மீடியா போரத்தின் வளர்ச்சி மற்றும் செயற்பாடுகள் பற்றியும் நாடு பூராகவும் உள்ள போரத்தின் உறுப்பினர்களின் கடந்த கால செயற்பாடுகள் பற்றியும் போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிஹான் இங்கு எடுத்துக்கூறினார்.

ஈரானிய தூதரகத்தின் ஆதரவுடன் நடத்தப்படுகின்ற மகளிர் நிகழ்வுகள் தேசிய தின நிகழ்வுகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கலந்துகொண்டு வருவதை ஞாபகப்படுத்தியதோடு ஈரான் நாட்டுக்கு தமது சில உறுப்பினர்கள் ஊடக சுற்றுலாவுக்கு சென்று வந்ததையும் போரத்தின் பொதுச்செயலாளர் ஸாதிக் ஷிஹான் ஞாபகப்படுத்தினார்.

எதிர்காலத்தில் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் போரத்தின் உறுப்பினர் களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற்கு ஊடகத்துறை பயிற்சி வாப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

ஈரான் கலாசார நிலையம் சார்பில் உரையாற்றிய கலாநிதி மொசாமி கூடார்ஸி,

இந்நாட்டில் சகல இனங்களையும் இணைத்து மீடியா போரத்தின் செயற்பாடுகள் நடைபெறவேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஊடக பயிற்சிகளையும் பாரசீக மொழி அறிவையும் வழங்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஈரான் கலாசார நிலையத்தில் இலவசமாக நடைபெறும் ஒரு வருட இரண்டு வருட கால பாரசீக மொழி கற்கையில் கலந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...