அரச ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை!

Date:

அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணம் போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகையை அரச அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

 

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...