உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை புதன் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ரஜப் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ஜூமாதல் ஆகிரஹ் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 ஜனவரி 02ஆம் திகதி வியாழக்கிழமை ஹிஜ்ரி 1446 ரஜப் மாதத்தின் 01ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏகமனதாக அறிவிக்கின்றன.