பௌசுல் ஹக் ஹஜ் கமிட்டி உறுப்பினராக இருப்பதற்கு இடைக்காலத் தடை..!

Date:

புதிய ஹஜ் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் பௌசுல் ஹக், கமிட்டியில் தொடர்ந்தும் உறுப்பினராக இருப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதி பி. குமார் ரத்னம் அவர்களினால் இன்று (22) இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16 வருடங்களாக கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ட்ரஸ்டியாக கடமையாற்றிய போது கணக்கறிக்கையை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துக்கு முறையாக சமர்ப்பிக்காததை வைத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி ஜும்ஆ மஸ்ஜிதின் ட்ரஸ்டியாக பணியாற்றிய காலத்தில் முஸ்லிம் நம்பிக்கை நிதியத்துக்கு (MCF) பங்களிப்பு செய்யாமையினால் வக்பு சபையினால் கடந்த வருடம் அவர் ட்ரஸ்டி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

பட்டயக் கணக்காளர் ரியாஸ் மிஹ்லார் தலைமையில் புத்தசாசன மத விவகார அமைச்சினால் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவில் அல்ஹாஜ் பௌசுல் ஹக் அவர்களும் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர்புடைய செய்தி: https://tamil.newsnow.lk/2024/12/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/

 

 

 

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...