தர்ம சக்தி அமைப்பு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரை சந்தித்தது!

Date:

தர்ம சக்தி அமைப்பின் தலைவர் கலாநிதி மாதம்பஹம அஸ்ஸஜி தேரர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சினேகபூர்வ விஜயமென்றை (07) இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவது தொடர்பான பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் தர்ம சக்தி அமைப்பும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் தர்ம சக்தி அமைப்பின் நிறைவேற்று செயலாளர் பாதிரியார் அநுர பெரேரா, உதவிச் செயலாளர் சிவ ஸ்ரீ சிவ தர்சக சர்மா குருக்கள், பொருளாளர் அஷ்ஷெய்க் ஏ.என்.எம். பிர்தௌஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரிஸான் ஹுஸைன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான சுல்கிப் மௌலானா, அஸாம் லத்தீப் ஆகியோருடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட், வக்ப் நியாய சபை செயலாளர் (பதில்) எம்.என்.எம். ரோஸன், திணைக்கள சகவாழ்வு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எம்.றிஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...