மின் விநியோகத் தடை தொடர்பில் முழுமையான விசாரணை..!

Date:

மின் விநியோகம் நேற்று (09) மாலை வழமைக்குத் திரும்பியுள்ளபோதும் அது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மின் சக்தி மின்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

அதேவேளை மின் விநியோகத் தடை தொடர்பில் இன்று (10) முழுமையான தகவல்களை வழங்கவுள்ளதாக மின்சார சபையின் தலைவர்  திலக் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மின்சார சபை உள்ளக குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மின் சக்தி அமைச்சின் மூலமும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

இனிமேல் இவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பரிந்துரைகளை அந்தக் குழு முன்வைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் மின்சார துண்டிப்பு இடம்பெற்றுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி சீதுவை மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 6 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இவ்வாறான நாடளாவிய ரீதியான மின் விநியோகத் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...