ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் நிலைநாட்டுவோம்:ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் செய்தி

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி..

ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பெருமகிழ்ச்சி அடைகிறது.

மனித சமூகத்துக்கு வழிகாட்டும் அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை கௌரவிக்கும் வகையில் அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட நோன்பின் பிரதான இலக்கு இறை அச்சத்தை வளர்த்துக்கொள்வது என்பதை நாம் அறிவோம்.

நோன்பு நோற்று இரவு வணக்கங்களில் ஈடுபட்டு தக்பீர் சொல்லி இறைவனுடைய நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் நாம் சகாத்துல் ஃபித்ராவை முறையாக வழங்கி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலாம் கூறி வாழ்த்துத் தெரிவித்து மனிதர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்கின்றோம்.

நாம் ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் எந்த அளவுக்கு நிலைநாட்டுகிறோம் என்பதிலேயே வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ளது.

நாம் இப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு இஸ்ரேலின் கொடுமைகளுக்கு இலக்காகிக் கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு ஈடேற்றம் கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கௌரவமாக வாழ ஒரு வழி பிறக்க வேண்டும் என்றும் இந்த நல்ல நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...