ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் நிலைநாட்டுவோம்:ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் செய்தி

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பெருநாள் வாழ்த்துச் செய்தி..

ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பெருமகிழ்ச்சி அடைகிறது.

மனித சமூகத்துக்கு வழிகாட்டும் அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை கௌரவிக்கும் வகையில் அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட நோன்பின் பிரதான இலக்கு இறை அச்சத்தை வளர்த்துக்கொள்வது என்பதை நாம் அறிவோம்.

நோன்பு நோற்று இரவு வணக்கங்களில் ஈடுபட்டு தக்பீர் சொல்லி இறைவனுடைய நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் நாம் சகாத்துல் ஃபித்ராவை முறையாக வழங்கி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலாம் கூறி வாழ்த்துத் தெரிவித்து மனிதர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்கின்றோம்.

நாம் ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் எந்த அளவுக்கு நிலைநாட்டுகிறோம் என்பதிலேயே வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ளது.

நாம் இப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு இஸ்ரேலின் கொடுமைகளுக்கு இலக்காகிக் கொண்டிருக்கும் பலஸ்தீன மக்களுக்கு ஈடேற்றம் கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கௌரவமாக வாழ ஒரு வழி பிறக்க வேண்டும் என்றும் இந்த நல்ல நாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...