தேஷபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்..

Date:

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்  இன்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை அன்றிலிருந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேஷபந்து தென்னகோனை 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...