ஒரே வருடத்தில் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி!

Date:

ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றி சிறப்பான சித்தி பெற்று கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி ரனுலி விஜேசிறிவர்தன சாதனை படைத்துள்ளார்.

ரனுலி மே 2024 இல் 2023 (2024) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, ஆங்கில இலக்கியத்தில் B சித்தியுடன் 8A மற்றும் 1B சித்தியைப் பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து, நவம்பர் 2024 இல், அவர் கணிதப்பிரிவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 3A சித்திகளை பெற்று தேசிய ரீதியில் 963 இடத்தையும் பெற்றுள்ளார்.

தனது 10 ஆம் வகுப்பு படிப்பை முடிக்கும் போதே ரனுலி, உயர்தரப் பாடத்திட்டத்திற்கும் தயாராகியுள்ளார். குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட மாணவர்கள் பாடசாலை மூலம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்படாததால், அவர் தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சைக்கு தோற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த நிலையில், 20 வருட அனுபவமுள்ள ஆசிரியரான அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறை திறமையான மாணவர்கள் விரைவாக முன்னேற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பட்டதாரிகள் பெரும்பாலும் 26 அல்லது 27 வயதில் பணியிடத்தில் சேர்கிறார்கள், மற்ற நாடுகளில் இது 21 அல்லது 22 வயதாகும், அதன்படி, விரைவான பட்டப்படிப்பு தனிநபர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...

காற்றழுத்தம் நீடிக்கிறது: நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழை

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து...

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...