பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டம்

Date:

பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி,நேற்று (23) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன குழந்தைகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்து, கொழும்பிலிருந்து காசா வரை, கொலையை நிறுத்துங்கள், ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பலஸ்தீனத்தை விடுவிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட சுலோக அட்டைகளை போராட்டக்காரர்கள்  ஏந்தி நின்றனர்.

பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் உட்பட சமூக செயற்பாட்டாளர், பலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

 

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...