பாடசாலை மாணவியின் மரணம்: மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையடுத்து கல்வி அமைச்சு நடவடிக்கை

Date:

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 16 வயதுடைய மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பாடசாலை அதிபரை விளக்கம் கேட்டு வரவழைத்ததாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் உடனடியாக பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக ஒன்று திரண்ட பொதுமக்கள் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி குறித்த பாடசாலையை முற்றுகையிட்டு இன்று (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மேல் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர், குறித்து சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபரிடம் விளக்கம் கோரப்படும் என்றும், சந்தேக நபரான ஆசிரியர் உடனடியாக  பணி இடமாற்றம் செய்யப்படுவார் என்றும், மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை அறிக்கை கிடைத்தபின் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...