மினாவில் இலங்கை ஹாஜிகள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைக்க ஏற்பாடு

Date:

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் இலங்கை ஹாஜிகளை மினாவில் ஒரே இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 ஹாஜிகளும் மினாவில் வலயம் 2 இல் (Zone 2) தங்க வைக்கப்படவுள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் இருந்து சென்றுள்ள ஹஜ் குழு உறுப்பினர்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாஜிகள் தங்க வைக்கப்படவுள்ள இடங்களை இலங்கையில் இருந்து வந்த ஹஜ் குழு உறுப்பினர் சட்டத்தரணி TK அஸுர் , இலங்கை வக்பு சபை உறுப்பினர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SP )மாஹில் டூல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரி ஏ.எஸ்.எம்.ஜாவித், சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பதில் கொன்சியுலர் ஜெனரல் திருமதி மபுஷா லாபிர் , ஏற்பாடுகளுக்கான தூதரகத்தின் உயர் அதிகாரி Dr. அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் நேற்று (19) சென்று பார்வையிட்டனர்.

ஹாஜிகளின் உணவு விநியோக ஏற்பாடுகளுக்கு பொறுப்பான ஜலால்டீன் ஹாஜி உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

(தகவல் மினாவிலிருந்து ASM ஜாவித்)

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...