சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்: 25 ஆண்டுகளில் முதல் முறையாக, ஒரு சிரிய ஜனாதிபதி ஒரு அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்டார்.

மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப் , பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின.

இப்போது சிரியா முன்னேறவேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என தெரிவித்தார்.

சிரியா மீதான தடைகளை நீக்க சவூதி அரேபிய இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை ட்ரம்ப் நீக்கியுள்ளார்,

இந்நிலையில், டிரம்ப், சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமது அல் ஷராவை சந்தித்தார். 25 ஆண்டுக்குப் பிறகு இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான முதல் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா மீதான தடைகளை நீக்க பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அந்த நாடுகள் தற்போது இதனை வரவேற்றுள்ளன.

ட்ரம்பின் அறிவிப்பை சிரியாவில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் வரவேற்று  ட்ரம்ப் பிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

தற்போது சிரியா அதிபராக இருக்கும் அகமது அல்-ஷரா, சிரியா போரின் போது அல்காயிதா பிரிவின் தலைவராக இருந்தவர்.

2016ஆம் ஆண்டு அந்த அமைப்புடன் தொடர்பை துண்டித்த நிலையில், தற்போது சிரியா இடைக்கால அரசின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.

சிரியா மீதான தடைகள் நீக்கப்பட்டதன் மூலம் அந்த நாட்டின் நிலை விரைவில் முன்னேற்றம் காணும் என்றும், சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என்கின்றனர்.

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...