டெங்குக்கான பொறுப்பை பாடசாலை அதிபர்களே ஏற்கவேண்டும்:கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு

Date:

பாடசாலைகள் வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்கான பொறுப்பை பாடசாலைகளின் அதிபர்களே ஏற்கவேண்டுமென கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு, அதிபர்கள் தர நிலை அதிகாரிகள் சங்கம்  எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்தே, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாகாணக் கல்வி பணிப்பாளர்களுக்கும் கல்வியமைச்சினால் அண்மையில் சுற்றறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, சகல பாடசாலை வளாகங்களிலும் நுளம்பு பரவுவதைத் தடுக்கும் வகையிலான திட்டமொன்றை செயற்படுத்த வேண்டுமென கல்வியமைச்சு அதன்மூலம் பணிப்புரை விடுத்திருந்தது.

அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காண்பதற்காக, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாடசாலை வளாகத்தில் அத்தகைய இடங்கள் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் தனிப்பட்ட முறையில் அதற்குப் பொறுப்பேற்கவேண்டுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அதிபர் தரநிலை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ, குறித்த சுற்றறிக்கையைத் தமது சங்கம் எதிர்ப்பதாகவும் அதிபர்களிடம் குறித்த பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு, உரிய தரப்பினர் விலகி இருப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...