டெங்குக்கான பொறுப்பை பாடசாலை அதிபர்களே ஏற்கவேண்டும்:கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அதிபர்கள் சங்கம் எதிர்ப்பு

Date:

பாடசாலைகள் வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகினால், அதற்கான பொறுப்பை பாடசாலைகளின் அதிபர்களே ஏற்கவேண்டுமென கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு, அதிபர்கள் தர நிலை அதிகாரிகள் சங்கம்  எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினால் பல பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்தே, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாகாணக் கல்வி பணிப்பாளர்களுக்கும் கல்வியமைச்சினால் அண்மையில் சுற்றறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, சகல பாடசாலை வளாகங்களிலும் நுளம்பு பரவுவதைத் தடுக்கும் வகையிலான திட்டமொன்றை செயற்படுத்த வேண்டுமென கல்வியமைச்சு அதன்மூலம் பணிப்புரை விடுத்திருந்தது.

அத்துடன், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் காண்பதற்காக, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், பாடசாலை வளாகத்தில் அத்தகைய இடங்கள் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபர் தனிப்பட்ட முறையில் அதற்குப் பொறுப்பேற்கவேண்டுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள அதிபர் தரநிலை அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவ, குறித்த சுற்றறிக்கையைத் தமது சங்கம் எதிர்ப்பதாகவும் அதிபர்களிடம் குறித்த பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு, உரிய தரப்பினர் விலகி இருப்பதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,505 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...