தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள் இடைநீக்கம்!

Date:

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்ததாக கூறப்படும் 22 மாணவர்கள்  பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக  உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல்கலைக்கழக பேராசிரியர்களை கொண்ட விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  பொறியியல் பீடத்தைச் சேர்ந்த  22 மாணவர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்கிழக்கு பல்கலைக்கழக  உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...