ஈரானின் அணுசக்தி வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டன:அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும்- டிரம்ப்

Date:

ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில்  தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதும் எங்கள் நோக்கமாகும்.

தாக்குதல்கள் அற்புதமானவை, இராணுவ வெற்றி. ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால், எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும்” என்று கூறினார்.

ஈரானில்   உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா  தாக்குதல் நடத்தியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்   தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், டரம்ப் வெளிப்படையான இராணுவத் தாக்குதலை அறிவித்துள்ளார்.

குறித்த பதவில், “ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது மிக வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

இப்போது அனைத்து விமானங்களும் ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன, முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகளின் மிக அழுத்தமாக வீசப்பட்டன என குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...