கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (‍NWSDB) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, 7 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என்றும் NWSDB குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவை நகர சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

இதேபோன்று, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...