சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்!

Date:

சஜித் பிரேமதாச அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019 காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.

வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையில் அவ்வமைச்சின் நிலையான விசாரணை பணியகத்திடம் இவ்விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வீடமைப்புத் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து அமைச்சு மட்டத்திலான விசாரணைகளை முன்னெடுக்க கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக, அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில், தேர்தலை மையப்படுத்தி அதற்கான விளம்பரங்களுக்கு பல கொடி ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...