தீவிரமடைந்து வரும் சிக்கன் குன்யா: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!

Date:

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிக்கன் குன்யா வைரஸ் மீண்டும் பரவும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் ( WHO) எச்சரித்துள்ளது.

இந்த வைரசால் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, மற்றும் நீண்டகால இயலாமை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம்  வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

‘சுமார் 56 நாடுகளில், 119 பில்லியன் மக்கள் சிக்கன் குன்யா தொற்று ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளில் சிக்கன் குன்யா பரவத்  தொடங்கியுள்ளது.  இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் அதிகளவான பாதிப்புக்களும் பதிவாகியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கன் குன்யா பரவல் தொடருமானால், அது உலகளாவிய சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதால், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய சிக்கன் குன்யா வைரஸ், கடந்த காலத்தில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்   மீண்டும் அதே அளவிலான அபாயம் உருவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...