விளையாட்டு துறையில் சாதித்த புத்தளம் மாணவர்கள்: வெற்றி பதக்கங்களை வென்று சாதனை

Date:

எம்.யூ.எம்.சனூன்

விளையாட்டு துறையில் புத்தளம் நகர பாடசாலைகளை சேர்ந்த ஐந்து மாணவர்கள் கடல் கடந்து வெற்றி பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டி இருக்கின்றார்கள்.

மலேசியாவில் நடைபெற்ற 17வது CK கிளாசிக் சர்வதேச திறந்த டைக்வுண்டோ சாம்பியன்ஷிப் (Open Taekwondo) போட்டிகளில் பங்குபற்றிய புத்தளம் மாணவர்கள் 15 ற்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று இலங்கை நாட்டுக்கும், புத்தளம் நகருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

பயிற்றுவிப்பாளரும், தடகள வீரருமான இஷாரா பியூமாலி சமரகோன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள், புத்தளம் சாந்த அன்றூஸ் தேசிய பாடசாலை மாணவி என்.ஈ.அசேன் விஷ்மிகா மூன்று தங்கப்பதக்கங்கள், புத்தளம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பாடசாலை மாணவி ஏ.ஆர்.எப்.ஹனா மஸ்யத் சாரா இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம், புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவி எம்.எச்.ரீமா செய்ன் இரண்டு தங்கப்பதக்கங்கள், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் எம்.எம்.ஷாதின் அஹமத் மூன்று வெள்ளி பதக்கங்கள் என 15 பதக்கங்களை அள்ளிக் குவித்து சாதித்து காட்டியுள்ளனர்.

இந்த வெற்றி வீரர்கள் ஐவரையும் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்கின்ற நிகழ்வு புத்தளம் நகர மத்தியில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.

புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அவர்களோடு புத்தளம் பீனிக்ஸ் அகடமி நிர்வாகமும் இணைந்து இந்த ஊர்வல நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்திருக்கின்ற பீனிக்ஸ் சர்வதேச பாடசாலையிலே நடைபெற்ற இது தொடர்பான பிரதான நிகழ்விலே புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் உள்ளிட்ட வெற்றி வீரர்கள் கேக் வெட்டி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...