ஜம்இய்யதுல் உலமா ஏற்பாட்டில் சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சி

Date:

2025.07.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்த ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியானது சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் ஆளணியினரான அஷ்-ஷைக் ஸபருல்லாஹ், சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வு பெறும் இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தல், அவர்களிடையே நல்ல சிந்தனைகளை விதைத்தல் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் போன்ற குறிக்கோள்களின் அடிப்படையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...