ஜம்இய்யதுல் உலமா ஏற்பாட்டில் சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் நடாத்தப்பட்ட ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சி

Date:

2025.07.08ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழு மற்றும் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழு ஆகியவை இணைந்து ஒழுங்கு செய்த ‘நல்லிணக்கமும், ஆரோக்கிய வாழ்வும்’ எனும் தலைப்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியானது சேனபுர-வவுனியா புனர்வாழ்வு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் இளைஞர் விவகாரக் குழுவின் ஆளணியினரான அஷ்-ஷைக் ஸபருல்லாஹ், சகோதரர் ரம்ஸி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வு பெறும் இளைஞர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தல், அவர்களிடையே நல்ல சிந்தனைகளை விதைத்தல் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்புதல் போன்ற குறிக்கோள்களின் அடிப்படையில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7.30 மணிக்கு!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ( 17 )...

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானின் பசிஜ் எனப்படும் துணை இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியைக் கொன்றதாக,...

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு நடவடிக்கை

QR முறைமையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பாக...

இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக ஜெனீவாவில் கைகோர்த்த OIC மற்றும் ஐநா.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை...