இறைவனின் இருப்பு தொடர்பில் சிங்கள மொழியில் நூல் வெளியீடு நாளை

Date:

பிரித்தானிய ஆய்வாளரும் நூலாசிரியருமான ஹம்ஸா அந்தரீஸ் சோர்ஸிஸ் எழுதிய The Devine Reality என்ற ஆங்கில நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் நாளை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

ஆய்வுக்கும் கற்கைகளுக்குமான மன்றத்தினால் (FRS) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு நாளை (28) மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.

இறைவனின் இருப்பு தொடர்பில் விளக்கும் இந்த நூல் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி பீடத்தின் நாட்டிய மற்றும் அரங்கக் கலை வருகைதரு விரிவுரையாளர் சமன் புஷ்ப லியனகே யினால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழிப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசின்ஹ, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுமேத வீரவர்தன, மத ஆய்வாளர் ஷான் சிராஜ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...