நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டில், உயிர் மாய்ப்புகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலிருந்ததாகவும் அப்போது 100,000க்கு 47 என்றளவில் உயிர் மாய்ப்புகள் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நேரத்தில், ஜனாதிபதி ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவுகளால், தாம் மிகக் குறைந்த நிலைக்கு வந்துள்ளோம்.
இப்போது அது ஒரு இலட்சத்திற்கு 15ஆக மாறியுள்ளது. வருடத்திற்கு 3,500 பேர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது அதிகரிக்கவில்லை.
நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. பிரபலமான மரணங்கள் மட்டுமே ஊடகங்களுக்குச் செல்கின்றன. இன்னும் பல தற்கொலை சம்பவங்கள் உள்ளன.
இந்த சம்பவங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், இப்போதெல்லாம் சர்ச்சைக்குரிய உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
ஆனால் ஊடகங்கள் கடந்த காலங்களைப் போல இதுபோன்ற விடயங்களைப் பெரிதாக காண்பிப்பதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றம்.-என்றார்.
அதேவேளை தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மருத்துவர் லக்மினி மகோதரத்ன கூறுகையில்,
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் ஒரு பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் குழந்தைகளின் தரவுகளைப் பார்த்தபோது, 22.4% குழந்தைகள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்
13-17 வயதுடைய இந்த பாடசாலை செல்லும் குழந்தைகளில் 11.9% பேர், ஏதோவொன்றைப் பற்றி கவலைப்படுவதால் இரவில் தூங்குவதில் சிரமப்படுவதாகக் கூறினர்.
சுமார் 18% பேர் மனச்சோர்வின் அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. 75% குழந்தைகளுக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.