இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

Date:

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20% ஆக குறைத்த செயல்முறையை ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விளக்கினார்.

இலங்கை மீது ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகளைக் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஒரு திறமையான குழு நியமிக்கப்பட்டதாகவும்  ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் துமந்த ஹுலங்கம மற்றும் சிறப்பு ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கிய அமெரிக்க தூதர் ஆகியோரின் பங்கேற்பையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

அத்துடன் அமெரிக்கா முன்வைத்த சில திட்டங்கள் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன என்றும், இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும், இன்னும் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

பொருளாதாரம் பாதிக்கப்படும் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை மறந்து விடுங்கள். இடைக்கால ஜனாதிபதி என்பதொன்று ஏற்படாது. மாற்று வழியில் அரசியல் செய்யுங்கள் என்பதை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் வரைபுக்கமைய பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும். அத்துடன் அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை என்பதுடன் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...